29 August 2004

வானம் தீட்டிய வண்ணப்படங்கள்

இன்று மாலை கோவை அருகில் உள்ள ஆனைக்கட்டி சென்றிருந்தேன். செல்லும் வழியில் எடுத்த படங்களில் சிலவற்றை தொகுத்துள்ளேன். ஒரு மணி நேரத்தில் வானம் காட்டிய வர்ணஜாலங்கள் பாருங்கள். பாரதி சொன்னதுபோல,

"ஆகா, என்ன வர்ணங்கள்! எத்தனைவித வடிவங்கள்! எத்தனை ஆயிரவிதமான கலப்புகள்!...நீல ஏரிகள்! கரும் பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனைவிதச் செம்மை! எத்தனைவகைப் பசுமை! நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள்!தங்கத் திமிங்கலங்கள் மிதக்கும் கருங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள், வர்ணக்களஞ்சியம். போ போ, என்னால் அதை வர்ணிக்கமுடியாது"





25 August 2004

இயற்கையும் செயற்கையும்


எங்கே எடுத்தேன் என்று நினைவில்லை. எங்கோ பயணம் சென்று கொண்டிருக்கும்போது கிளிக்கியது.

23 August 2004

வானுயர்ந்த சிலை


பிரமாண்டம்! வேறென்ன சொல்ல?

21 August 2004

சிரவணபெலகொலா


இடம்: சிரவணபெலகொலா.---வெள்ளை குளத்து முனிவர் (பெல கொளத்து சிராவணர்!) என்று பொருளாம்.----
சந்திரகுப்த மௌரியர் பரந்த பேரரசை துறந்து தனது சமண சமய குருவுடன்(பகவான் பத்ரபாகு) இதில் தெரியும் மலையில்தான் தனது இறுதி காலத்தைக் கழித்தார். அதனால் இந்த குன்று சந்திரகிரி என்று அழைக்கப்படுகிறது.தென்னிந்தியாவில் சமணத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்ட இடம்.

மலையுச்சியில் நிற்கும்போது தென்றல் உடலை வருட, 2500 ஆண்டுகால வரலாறு மனதில் உருண்டது. உணர்வலைகள் அதிர்ந்தன. சலனம் குறைந்து மௌனம் நிறைந்தது. வாழ்வில் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று.

இங்கு எடுத்த இன்னும் சில படங்கள் தொடர்ந்து வரும்.

03 August 2004

வானம் எனக்கொரு போதிமரம்


வானம் -
நம்மை தலை நிமிர வைக்கும் நம்பிக்கை ஊற்று;
எண்ணற்ற வளங்களைக் கொண்டிருக்கும் அமுதசுரபி;
வண்ணங்களை வாரியிறைக்கும் வள்ளல்;
கற்பனைச் சிறகுகளை விரிக்கவைக்கும் சிந்தனைச் சுரங்கம்;
இருந்தும் இல்லாமல் இருட்டும் ஒளியுமாய் விளங்கும் இறைவன்.

வானம் வசப்பட்டால் வாழ்வும் வசப்படும்.

வானைப் போற்றுதும் வானைப் போற்றுதும் வானைப் போற்றுதும்.