29 July 2004

சேதி சொல்லும் பூ


கண்ணைக் கவரும் வண்ணப்பூ
மஞ்சள் நிறத்து வெண்டைப்பூ;
பாப்பாவைப் பார்த்து சிரிக்குது
வா வா என்றே அழைக்குது;
அருகில் சென்று கேட்டால்
அழகாய் சிரித்து சொல்லுது:
'எனக்கும் மேலே உள்ளது மொக்கு
செடியில் கீழே உள்ளது பிஞ்சு,
இலைகள் தண்டு எல்லாத்துக்கும்
உயிரைத்தருவது மண்ணில் இருக்கும் வேரு.
அது போல
பாப்பா, பாப்பா மறக்காதே
மனித வாழ்வில் பல நிலைகள்
எல்லா நிலையிலும் உயிர்ப்பைத் தருவது
மனதில் நிலைக்கும் மாறா அன்பே.'

No comments: