07 July 2004

குவாலியர் கோட்டையில்

தேலி கா மந்திர்

எண்ணைகாரன் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் குவாலியர் கோட்டையில் உள்ள கோயில்களுள் பழமையானது என்று கருதப்படுகிறது. எந்த கட்டடக்கலையைச் சேர்ந்தது என்று இனம் பிரிக்கமுடியாத, ஒரு கலந்துகட்டிய சமத்துவ புரக் கோயில். வயது : 1000 ஆண்டுகளுக்கு மேல். தனித்து நிற்கும் இந்த கட்டடத்தின் அருமை நேரில் பார்த்தால் அதிகமாகத் தெரியும்.


மாமியார் மருமகள் கோயில்

இதுவும் குவாலியர் கோட்டையில் உள்ள இரட்டைக் கோயில்களில் ஒன்று. தரமான கற்களில் செதுக்கப்பட்ட நேர்த்தியான வேலைப்பாடுகள் வியக்கவைப்பவை. இந்த கோயிலுக்கு ஏன் இந்த பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு?

No comments: